WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

2 செப்டம்பர், 2013

pfrda

NFPE

TN  NFPE  COC  DECIDES  TO  HOLD  THE  PROGRAMME     ON  3RD  SEPTEMBER 2013

     அன்புத் தோழர்களுக்கு வணக்கம். !  நம்முடைய மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம் மற்றும்  நம்முடைய NFPE  சம்மேளனம் எடுத்த முடிவினை அமல் படுத்திட வேண்டி
           
           புதிய பென்ஷன் திட்டத்திற்கான மசோதா (PFRDA – PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY) பாராளுமன்றத்தில்  எதிர் வரும் செப்டம்பர் 2 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுவதால் , தமிழ் மாநில   NFPE  சம்மேளனத்தின்  கீழ்  உள்ள  உறுப்பு சங்கங்கள்   அடங்கிய தமிழ் மாநில  அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக  எதிர்வரும் 03.09.2013  அன்று  தமிழகம் தழுவிய அளவில்  இந்த அறைகூவலை ஏற்று  நடத்திட  வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்

   அதே  தேதியில்  தமிழகத்தில் ,  சென்னை மாநகரில் உள்ள கோட்டங்கள் உட்பட, அனைத்து   தலைமை அஞ்சலக / கோட்ட அலுவலக வாயிலில் PFRDA  மசோதாவை எதிர்த்து  உணவு இடைவேளை  கண்டன ஆர்ப்பாட்டமோ  அல்லது  மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டமோ தவறாமல் நடத்திட வேண்டுகிறோம்.

     தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவரும் மாநிலச் செயலரும்   மதுரை கோட்டச் சங்கங்கள் ஏற்று நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் அதே தேதியில் கலந்து கொள்வார்கள்  என்று அறிவிக்கிறோம்

    
     இதற்கான செய்திகளை பத்திரிகை மற்றும்  தொலைக் காட்சி ஊடகங்களுக்கு தவறாமல் அளித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திட வேண்டுகிறோம்

நமது போராட்டம் வெல்லட்டும் !
PFRDA  மசோதா முடங்கட்டும் ! !

            = தமிழ் மாநில  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு